Monday, September 14, 2009

ஒரு நட்பின் தேடல்...

என்னால் அனுப்பப்படும்


எல்லா குறுஞ்செய்திகளும்

இடம் அறியாமல்

மரணித்து விடுவதை

உன் அலைப்பேசியின்

மவுனம் உணர்த்துகிறது...

உன் பிரத்யேக தொலைபேசியின்

விடையில்லா மணியோசைக்கு

பின்வரும் பதிவு செய்யப்பட்ட

பெண்ணின் குரலும்

பரவசத்தை தவிர்த்து

பயத்தையே தருகிறது...

அடுக்கப்பட்ட நாட்குறிப்பேடுகளில்

தேடி எடுத்து அனுப்பிய

உனக்கான மின்னஞ்சலும்

பாதி வழியிலேயே

குற்றுயிராகி திரும்பி விடுகிறது...

நம் இருவருக்குமான பிரளாத

நினைவுகள் முட்டி சாய்க்க

விழி மீதிருந்து

பிரிந்தோடிய கண்ணீர்

மார்‌பெங்கும் பறந்தோடி

அணை கட்டி நிற்கிறது

மொழியற்ற வலியின் கவிதையாய்...

குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் 5 அற்புத வழிமுறைகள்

5 அற்புத வழிமுறைகள்


வெற்றி வாழ்விற்கு, சாதனை வாழ்விற்கு, சந்தோஷ வாழ்விற்கு அடிப்படை குறிக்கோள் மற்றும் வைராக் கியத்துடன் கூடிய திட்டமிட்ட செயல்பாடே ஆகும். வெற்றி என்பது குறிக்கோள்களை மட்டும் முடிவு செய்த வுடன் தானாக வருவது கிடையாது.

வெற்றி அல்லது சாதனை என்பது எந்த அளவுக்கு உங்கள் குறிக்கோளுக்காக வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்தே வருகின்றது. வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேட்பீர்களா னால், அவர்கள் நிச்சயம், “குறிக்கோளுக்காகவே எங்கள் வாழ்க்கை” என்ற தாரக மந்திரமே எங்கள் வெற்றிக்கு காரணம் என கூறுவார்கள். இதைத்தான் உலகத்தில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி வேடிக்கையான செய்திகள் நிரூபிக்கின்றது. எடிசன் தன் கண்டுபிடிப்புகள் என்ற குறிக்கோள்களுக்காக உணவை மறந்த நாட்கள், மனைவியையே மறந்த தருணங்கள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே குறிக் கோள்களை காதலிக்க துவங்கினால், குறிக் கோள்களை அடைய எத்தகைய தியாகங் களையும் செய்ய தயார் ஆகுவோம். வெற்றிகள் குவியத் துவங்கும். மகிழ்வான வாழ்க்கை வசப்பட ஆரம்பிக்கும். சாதனை சரித்திரத்தில் உங்கள் பெயர்களை பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படும் வாய்ப்பும் உருவாகும்.

சாதனை சரித்திரத்தை உருவாக்க வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் என் இனிய தன்னம்பிக்கை வாசக நண்பர்களே, வாழ்வில் சாதனைகளை உருவாக்க உதவும் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கி, விடாமுயற்சியுடன் செயலாற்றி எளிதில் வெற்றியை ஈட்டும் வழிமுறைகளை இக்கட்டுரை மூலம் பார்க்கலாம்.

1. உள்நோக்கி பயணம் செய்யுங்கள்

இன்று பலரும் தங்கள் ஆசைகளை, குறிக்கோள்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாமல் போக முதல் காரணம், அந்த ஆசை அல்லது குறிக்கோள் உண்மையிலேயே அவருடைய ஆழ் மனதின் ஆசையாகவோ, குறிக்கோளாகவோ இருக்காது. அந்த ஆசை அல்லது குறிக்கோள் அவர் பெற்றோராலோ அல்லது அவர் நண்பராலோ அல்லது ஆசிரி யாராலோ அல்லது ஏதேனும் சூழ்நிலைகளோ அல்லது ஏதேனும் திரைப்பட காட்சிகளாகவோ அல்லது ஏதேனும் தொலைக்காட்சி தொடர் களாகவோ உருவாக்கப்பட்ட ஆசை அல்லது குறிக்கோளாக இருக்கலாம்.

ஆனால் நம் ஆழ்மனது உறுதியாக அடைய வேண்டும் என முடிவு செய்து விடுகின்ற ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை புறமனதும், ஆழ்மனதும் இணைந்து செயலாற்றி நிறைவேற்றி விடுகின்றன. எடுத்துக் காட்டாக உயிர்வாழ உதவும் ஆக்சிஜன், உணவு, நீர் போன்றவற்றை தேவைக்கேற்ப அடைந்தே தீரவேண்டும் என்ற அடங்கா ஆசை மற்றும் தேவை இயற்கையால் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது நம் புறமனது வேண்டாம் என்று நினைத்தாலும் ஆழ்மனது எப்படியாவது புறமனதை ஒத்துக்கொள்ளச் செய்து நம் அடிப்படை தேவைகளை முடிந்த அளவுக்கு அடையச் செய்கின்றது. புறமனது உணவு வேண்டாம், கடமைதான் முக்கியம் என்று கட்டுப்படுத்த முயன்றாலும் ஆழ்மனது புறமனதோடு சமாதானத்தை ஏற்படுத்தி உணவு உண்ணுலதற்கான வழிவகையைச் செய்துவிடும்.

ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிக் கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கு முன், அந்தக் குறிக்கோள் உங்கள் ஆழ்மனதின் விருப்ப, தேவை, மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையது தானா என ஆராய்ந்து பார்ப்பது எளிதாக குறிக்கோளை அடையும் வழிமுறைக்கு அடிப்படையாகும்.

எப்போதேனும் உங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத ஒரு குறிக்கோளை அடைய ஆசைப்பட்டால், முதலில் மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு உங்கள் குறிக்கோளை எடுத்துரைத்து உங்கள் ஆழ்மனத்தின் குறிக்கோளாக மாற்றுங்கள்.

2. குறிக்கோளை முடிவு செய்யுங்கள்

நீங்கள் உள்நோக்கிய பயணத்தின் மூலம் ஆழ்மனதின் தன்மையை அறிந்து, அதன் விருப்பத்திற்கு ஏற்ப குறிக்கோளை முடிவு செய்தாலும் சரி, அல்லது உங்கள் தவிர்க்க முடியாத தேவை அல்லது சூழ்நிலை திணிக்கும் குறிக்கோளாக இருந்தாலும் சரி, உங்களை வெற்றியினராக மாற்ற உதவப்போகும் குறிக் கோளை கவனமாக ஆனால் உறுதியாக முடிவு செய்யுங்கள்.

நீங்கள் முடிவு செய்யப்போகும் குறிக் கோள் எந்த அளவு பொருத்தமானதாக, சரியானதாக, சிறப்பானதாக இருக்கின்றதோ, அதைப் பொறுத்துதான், நம் மனது நம் குறிக்கோளுக்காக நம்மை செயல்பட செய்து நம்மை வெற்றியடையச் செய்யும்.

எனவே உங்கள் வாழ்நாள் / நீண்ட கால குறிக்கோளை அடையும் முயற்சியில், குறிக் கோளை முடிவு செய்வது என்பது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். ஆகவே நண்பர்களே, நீண்ட கால குறிக்கோளை முடிவு செய்யும்போது, ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை செலவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் முடிவு செய்யும் குறிக்கோள் உறுதியானதாக உயர்ந்ததாக, சிறந்ததாக, உள்ளத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலர் அவசர கதியில், பிறர் தலையீட்டை அனுமதித்து தங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத குறிக்கோள்களை முடிவு செய்து, வெற்றிகளை ஈட்டினாலும், உலக சாதனை சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக பலர் ஆசிரியர், பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க இந்திய ஆட்சிப்பணியியல் (IAS)தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் வந்தும், ஒரு கட்டத்தில் தங்கள் பதவியை விட்டு விட்டு பிறதுறைகளில் மீண்டும் குறிக்கோள்களுடன் செயல்பட்டு அபரிதமான வெற்றிகளுடன் சாதனை நாயகர்களாக மாறமுடியாமல் அடங்கிவிடுகிறார்கள்.

ஆகவே குறிக்கோளை முடிவு செய்யும் இந்த கட்டம் வாழ்க்கையில் மிக மிக முக்கிய மான தருணம். எனவே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதுடன், பல்வேறு வெற்றியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் அறிஞர் களிடமும் கருத்துக்களை கேட்டு மிக மிக கவன மாக சிறப்பாக குறிக்கோளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படி செய்தால், குறிக்கோளை நோக்கிய பயணம் வேகமாகவும், தடையற்ற தாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் அமைவது நிச்சயம்.

3. குறிக்கோளுக்காக வாழ துவங்குங்கள்

உங்கள் குறிக்கோள் நோக்கி நீங்கள் துவக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்ந்த பலன்களை, விளைவுகளை, முடிவுகளை அடைய வேண்டுமானால், நிச்சயமாக நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக வாழ வேண்டும். குறிக் கோளினையே வாழ்க்கையாக மாற்றவேண்டும். இன்று வரை உலக சாதனை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருடைய வெற்றி வாழ்வின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தீர்களானால், நிச்சயம் அவர்கள் தங்கள் குறிக்கோளையே வாழ்க்கையாக மாற்றி வைராக்கியத்தோடு வாழ்ந்திருப்பார்கள்.

எப்படி குறிக்கோளினை வாழ்க்கையாக மாற்றுவது?

சாதாரண ஒரு குறிக்கோளினை அடைந்தே தீர வேண்டும் என்ற அசாதாரண அவசியமாக மாற்றினால் மட்டுமே, உங்கள் வாழ்வில் நீங்கள் கனவு காணும் உயரிய செயல்களை அல்லது சாதனைகளை அடைய முடியும். எனவே நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் குறிக்கோள் களை, அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கூடிய இலக்குகளாக மாற்றுவது வெற்றிக்கு அடிப்படையாகும். குறிக்கோளையே வாழ்க்கையாக்க உதவும் வழிமுறைகள் :

மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என சரிபார்க்கவும்.

நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என ஆய்ந்து பார்க்கவும். அப்படி உங்கள் மனதிற்கு பிடிக்காத குறிக் கோளாக இருந்தால், நிச்சயமாக அந்த குறிக் கோளுக்காக உங்கள் நேரம் மற்றும் சக்தியை வீண் விரயம் செய்யாது வேறொரு குறிக்கோளை தேர்ந்தெடுக்க ஆயுத்தமாகுங்கள்.

திட்டவட்டமான குறிக்கோளா என உறுதி செய்யவும்

காரணம் நாம் அடைய நினைக்கும் குறிக் கோள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டும் நம் மனதிற்கு அல்லது நமக்கு எதை அடைவதற் காக செயல்பட வேண்டும் என்ற உறுதியான உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாம் குறிப்பிட்ட எந்த விளைவுக்காக அல்லது முடிவுக்காக வாழ்கிறோம் என நம் ஆழ்மனதிற்கு உறுதியாக தெரிந்திருந்தால், நம் ஆழ்மனது நம்மை, நம் சக்தியை, நம் செயல்களை, நம் எண்ணங்களை முழுமையாக அந்த குறிப்பிட்ட இலக்கை நோக்கி செயல்படுத்த துவங்கும். நம் ஆழ்மனது திட்டவட்டமான செய்திகளை மட்டுமே நம்பும் தன்மை கொண்டது. அது நம் குறிக்கோளை நம்பி தன்னுள் இடம் அளித்து விட்டால், அந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளுமானால், நிச்சயம் குறிக்கோளே நம் வாழ்வு என்ற நிலையில் நாம் நிச்சயம் தடைகளை தாண்டி வெற்றிகளை குவிப்போம். சாதனைகளை நிகழ்த்துவோம்.

குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே

எப்போது உங்கள் மனது ஒரு உயரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவு செய்கின்றதோ, உடனடியாக அந்த குறிக்கோளை எழுத்து வடிவத்தில் குறிக்கோளை திரும்ப திரும்ப படியுங்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் தினமும் திரும்ப திரும்ப நடமாடும் இடங்களில் உங்கள் பார்வையில் படும்படி பதித்து வையுங்கள். இச்செயல் உங்களுக்கு உங்கள் குறிக் கோளை உங்கள் ஆழ்மனதில் பதிய வைக்க உதவும்.

ஆனால் சாதிக்க துடிக்கும் சாதனை மனிதர்கள் இந்த குறுக்கு வழிகள் எதுவும் இன்றியே அவர்கள் குறிக்கோளை நோக்கிய லட்சிய பயணத்தில் வைராக்கியத்தோடு, முழு மனதையும் ஈடுபடுத்தி செயலாற்றி வெற்றி கொண்டிருப்பர்.

தனியாத தாகம் கொள்ளுங்கள்

குறிக்கோளை அடைவதனால் வர விருக்கும். அற்புத நன்மைகளை நன்கு மனதில் பதிய வையுங்கள். இந்த நன்மைகள் உங்களுக்கு, உங்களை சார்ந்த குடும்பத்தவருக்கு, உங்கள், உங்கள் தன்மானத்திற்கு, சமூக அந்தஸ்திற்கு, உங்கள் பொருளாதார உயர்வுக்கு, உங்கள் வாழ்வின் அர்த்தத்திற்கு எந்த அளவுக்கு உதவி புரிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து முழுமையாக உணருங்கள். மேற்கண்ட எண்ணப் பதிவுகள் மற்றும் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மனக்காட்சித் திரையில் காணத் துவங்குங்கள். இந்த செயல் உங்கள் ஆழ்மனதிற்கு எப்படியேனும் இந்த குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தி விடும். அந்த தாகம் எந்த தடைகள் வந்தாலும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வெற்றிப்பாதையை நோக்கி வழிநடத்தும்.

முடியும் என்று நினைத்தால் முடியும்.

பலரும் குறிக்கோள்களை அடைய முடியாமல், குறிக்கோள்களையே விட்டுவிட காரணம், நான் சாதரணமானவன், நான் திறமை யற்றவன், என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களே. உலக வரலாற்றைபுரட்டி பார்த்தால் தெரியும். வெற்றி பெற்றவர்களில் அதிகமானவர்கள் ஏழ்மை, ஊனம், கல்வியறி வின்மை, என பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெற்றவரே என்பது புரிய வரும்.

ஆகவே நீங்கள் குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்ற மனநிலையை உருவாக்க வேண்டு மானால், வெற்றியாளர்களின் சுயசரிதைகளை படிப்பது பயிலரங்குகளில் கலந்து கொள்ளுவது, வெற்றி பெற்றவரின் சொற் பொழிவுகளை கேட்பது, என்னால் முடியும், என்னால் முடியும் என சுய அறிவுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.

வாழ்வின் அனைத்து பகுதிகளையும் கருத்தில் கொண்டு குறிக்கோள் முடிவு செய்வது நல்லது

குறிக்கோள் முடிவு செய்யும்போது, வாழ்வின் ஒவ்வொரு பகுதி (குடும்பம், பொருளாதாரம், சமூகம், உடல்நலம், மனநலம் போன்ற காரணிகளை)களையும் திருப்திப் படுத்தும் அடிப்படையில் அமையும் படி பார்த்துக் கொள்ளவும்.

ஏனென்றால், குறிக்கோளை நோக்கி வேகமான வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் ஒரு வாழ்வு சார்ந்த காரணியில் திருப்தியின்மை ஏற்பட்டுவிட்டால், நம் குறிக்கோளை நோக்கிய செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே குறிக்கோள் நிர்ணயம் செய்யும் வழிமுறையின் போது, உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் வாழ்வு சார்ந்த அனைத்து காரணி களிலும் எந்த எந்த நிலையை எட்ட வேண்டும் என்ற துணை குறிக்கோள்களையும் முடிவு செய்வது நல்லது.

எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட நாளில், நாம் அடைய முடிவு செய்திருக்கும் வாழ்நாளில் அடைய வேண்டிய குறிக்கோளினை நோக்கிய பயணத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தில், நம் உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் (எடை அளவு, இரத்த அளவு போன்ற காரணிகளில்)நாம் குடும்பத்திற்கு வழங்கும் தரமான நேரத்தின் அளவு (Quality time) எந்த அளவு இருக்க வேண்டும் என்பது போன்ற ஒவ்வொரு காரணிகளையும் குறிக்கோள் முடிவு செய்யும் வழிமுறையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு குறிக்கோளை அனைத்து குடும்ப, சமுதாய, தனிப்பட்ட காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்வோமானால் நம் லட்சிய பயணம் தங்கு தடையின்றி வேகமாக செல்வது உறுதி. வெற்றியும் உறுதி.

முடியும் என்றால் முடிவெடுங்கள்

குறிக்கோள் நோக்கிய பயணத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் மற்றொரு காரணி, உங்கள் குறிக்கோள் உங்களிடம் உள்ள பல திறன் மற்றும் நேரத்தின் மூலம் அடைய முடியும் குறிக்கோளா? இல்லையா என்பது.

நீங்கள் நிர்ணயம் செய்யும் குறிக்கோள் உங்கள் கல்வி தகுதி, உடல் பலம், பண பலம், தேர்ந் தெடுக்கும் கால அளவு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு கல்லூரியின் முதல்வராக வேண்டு மானால் 10 வருடம் விரிவுரையாளராக பணி யாற்றியே ஆக வேண்டும். அப்போது தான் உங்கள் குறிக்கோள் உங்கள் வாழ்வின் அடிப்படை அம்சமாக மாறும். நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக அர்ப்பண வாழ்வு வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் சாதனை சாகசங்கள் எளிதில் நிறைவறேத் துவங்கும்.

குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் 5 அற்புத வழிமுறைகள்

5 அற்புத வழிமுறைகள்


வெற்றி வாழ்விற்கு, சாதனை வாழ்விற்கு, சந்தோஷ வாழ்விற்கு அடிப்படை குறிக்கோள் மற்றும் வைராக் கியத்துடன் கூடிய திட்டமிட்ட செயல்பாடே ஆகும். வெற்றி என்பது குறிக்கோள்களை மட்டும் முடிவு செய்த வுடன் தானாக வருவது கிடையாது.

வெற்றி அல்லது சாதனை என்பது எந்த அளவுக்கு உங்கள் குறிக்கோளுக்காக வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்தே வருகின்றது. வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேட்பீர்களா னால், அவர்கள் நிச்சயம், “குறிக்கோளுக்காகவே எங்கள் வாழ்க்கை” என்ற தாரக மந்திரமே எங்கள் வெற்றிக்கு காரணம் என கூறுவார்கள். இதைத்தான் உலகத்தில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி வேடிக்கையான செய்திகள் நிரூபிக்கின்றது. எடிசன் தன் கண்டுபிடிப்புகள் என்ற குறிக்கோள்களுக்காக உணவை மறந்த நாட்கள், மனைவியையே மறந்த தருணங்கள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே குறிக் கோள்களை காதலிக்க துவங்கினால், குறிக் கோள்களை அடைய எத்தகைய தியாகங் களையும் செய்ய தயார் ஆகுவோம். வெற்றிகள் குவியத் துவங்கும். மகிழ்வான வாழ்க்கை வசப்பட ஆரம்பிக்கும். சாதனை சரித்திரத்தில் உங்கள் பெயர்களை பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படும் வாய்ப்பும் உருவாகும்.

சாதனை சரித்திரத்தை உருவாக்க வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் என் இனிய தன்னம்பிக்கை வாசக நண்பர்களே, வாழ்வில் சாதனைகளை உருவாக்க உதவும் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கி, விடாமுயற்சியுடன் செயலாற்றி எளிதில் வெற்றியை ஈட்டும் வழிமுறைகளை இக்கட்டுரை மூலம் பார்க்கலாம்.

1. உள்நோக்கி பயணம் செய்யுங்கள்

இன்று பலரும் தங்கள் ஆசைகளை, குறிக்கோள்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாமல் போக முதல் காரணம், அந்த ஆசை அல்லது குறிக்கோள் உண்மையிலேயே அவருடைய ஆழ் மனதின் ஆசையாகவோ, குறிக்கோளாகவோ இருக்காது. அந்த ஆசை அல்லது குறிக்கோள் அவர் பெற்றோராலோ அல்லது அவர் நண்பராலோ அல்லது ஆசிரி யாராலோ அல்லது ஏதேனும் சூழ்நிலைகளோ அல்லது ஏதேனும் திரைப்பட காட்சிகளாகவோ அல்லது ஏதேனும் தொலைக்காட்சி தொடர் களாகவோ உருவாக்கப்பட்ட ஆசை அல்லது குறிக்கோளாக இருக்கலாம்.

ஆனால் நம் ஆழ்மனது உறுதியாக அடைய வேண்டும் என முடிவு செய்து விடுகின்ற ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை புறமனதும், ஆழ்மனதும் இணைந்து செயலாற்றி நிறைவேற்றி விடுகின்றன. எடுத்துக் காட்டாக உயிர்வாழ உதவும் ஆக்சிஜன், உணவு, நீர் போன்றவற்றை தேவைக்கேற்ப அடைந்தே தீரவேண்டும் என்ற அடங்கா ஆசை மற்றும் தேவை இயற்கையால் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது நம் புறமனது வேண்டாம் என்று நினைத்தாலும் ஆழ்மனது எப்படியாவது புறமனதை ஒத்துக்கொள்ளச் செய்து நம் அடிப்படை தேவைகளை முடிந்த அளவுக்கு அடையச் செய்கின்றது. புறமனது உணவு வேண்டாம், கடமைதான் முக்கியம் என்று கட்டுப்படுத்த முயன்றாலும் ஆழ்மனது புறமனதோடு சமாதானத்தை ஏற்படுத்தி உணவு உண்ணுலதற்கான வழிவகையைச் செய்துவிடும்.

ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிக் கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கு முன், அந்தக் குறிக்கோள் உங்கள் ஆழ்மனதின் விருப்ப, தேவை, மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையது தானா என ஆராய்ந்து பார்ப்பது எளிதாக குறிக்கோளை அடையும் வழிமுறைக்கு அடிப்படையாகும்.

எப்போதேனும் உங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத ஒரு குறிக்கோளை அடைய ஆசைப்பட்டால், முதலில் மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு உங்கள் குறிக்கோளை எடுத்துரைத்து உங்கள் ஆழ்மனத்தின் குறிக்கோளாக மாற்றுங்கள்.

2. குறிக்கோளை முடிவு செய்யுங்கள்

நீங்கள் உள்நோக்கிய பயணத்தின் மூலம் ஆழ்மனதின் தன்மையை அறிந்து, அதன் விருப்பத்திற்கு ஏற்ப குறிக்கோளை முடிவு செய்தாலும் சரி, அல்லது உங்கள் தவிர்க்க முடியாத தேவை அல்லது சூழ்நிலை திணிக்கும் குறிக்கோளாக இருந்தாலும் சரி, உங்களை வெற்றியினராக மாற்ற உதவப்போகும் குறிக் கோளை கவனமாக ஆனால் உறுதியாக முடிவு செய்யுங்கள்.

நீங்கள் முடிவு செய்யப்போகும் குறிக் கோள் எந்த அளவு பொருத்தமானதாக, சரியானதாக, சிறப்பானதாக இருக்கின்றதோ, அதைப் பொறுத்துதான், நம் மனது நம் குறிக்கோளுக்காக நம்மை செயல்பட செய்து நம்மை வெற்றியடையச் செய்யும்.

எனவே உங்கள் வாழ்நாள் / நீண்ட கால குறிக்கோளை அடையும் முயற்சியில், குறிக் கோளை முடிவு செய்வது என்பது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். ஆகவே நண்பர்களே, நீண்ட கால குறிக்கோளை முடிவு செய்யும்போது, ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை செலவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் முடிவு செய்யும் குறிக்கோள் உறுதியானதாக உயர்ந்ததாக, சிறந்ததாக, உள்ளத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலர் அவசர கதியில், பிறர் தலையீட்டை அனுமதித்து தங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத குறிக்கோள்களை முடிவு செய்து, வெற்றிகளை ஈட்டினாலும், உலக சாதனை சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக பலர் ஆசிரியர், பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க இந்திய ஆட்சிப்பணியியல் (IAS)தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் வந்தும், ஒரு கட்டத்தில் தங்கள் பதவியை விட்டு விட்டு பிறதுறைகளில் மீண்டும் குறிக்கோள்களுடன் செயல்பட்டு அபரிதமான வெற்றிகளுடன் சாதனை நாயகர்களாக மாறமுடியாமல் அடங்கிவிடுகிறார்கள்.

ஆகவே குறிக்கோளை முடிவு செய்யும் இந்த கட்டம் வாழ்க்கையில் மிக மிக முக்கிய மான தருணம். எனவே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதுடன், பல்வேறு வெற்றியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் அறிஞர் களிடமும் கருத்துக்களை கேட்டு மிக மிக கவன மாக சிறப்பாக குறிக்கோளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படி செய்தால், குறிக்கோளை நோக்கிய பயணம் வேகமாகவும், தடையற்ற தாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் அமைவது நிச்சயம்.

3. குறிக்கோளுக்காக வாழ துவங்குங்கள்

உங்கள் குறிக்கோள் நோக்கி நீங்கள் துவக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்ந்த பலன்களை, விளைவுகளை, முடிவுகளை அடைய வேண்டுமானால், நிச்சயமாக நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக வாழ வேண்டும். குறிக் கோளினையே வாழ்க்கையாக மாற்றவேண்டும். இன்று வரை உலக சாதனை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருடைய வெற்றி வாழ்வின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தீர்களானால், நிச்சயம் அவர்கள் தங்கள் குறிக்கோளையே வாழ்க்கையாக மாற்றி வைராக்கியத்தோடு வாழ்ந்திருப்பார்கள்.

எப்படி குறிக்கோளினை வாழ்க்கையாக மாற்றுவது?

சாதாரண ஒரு குறிக்கோளினை அடைந்தே தீர வேண்டும் என்ற அசாதாரண அவசியமாக மாற்றினால் மட்டுமே, உங்கள் வாழ்வில் நீங்கள் கனவு காணும் உயரிய செயல்களை அல்லது சாதனைகளை அடைய முடியும். எனவே நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் குறிக்கோள் களை, அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கூடிய இலக்குகளாக மாற்றுவது வெற்றிக்கு அடிப்படையாகும். குறிக்கோளையே வாழ்க்கையாக்க உதவும் வழிமுறைகள் :

மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என சரிபார்க்கவும்.

நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என ஆய்ந்து பார்க்கவும். அப்படி உங்கள் மனதிற்கு பிடிக்காத குறிக் கோளாக இருந்தால், நிச்சயமாக அந்த குறிக் கோளுக்காக உங்கள் நேரம் மற்றும் சக்தியை வீண் விரயம் செய்யாது வேறொரு குறிக்கோளை தேர்ந்தெடுக்க ஆயுத்தமாகுங்கள்.

திட்டவட்டமான குறிக்கோளா என உறுதி செய்யவும்

காரணம் நாம் அடைய நினைக்கும் குறிக் கோள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டும் நம் மனதிற்கு அல்லது நமக்கு எதை அடைவதற் காக செயல்பட வேண்டும் என்ற உறுதியான உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாம் குறிப்பிட்ட எந்த விளைவுக்காக அல்லது முடிவுக்காக வாழ்கிறோம் என நம் ஆழ்மனதிற்கு உறுதியாக தெரிந்திருந்தால், நம் ஆழ்மனது நம்மை, நம் சக்தியை, நம் செயல்களை, நம் எண்ணங்களை முழுமையாக அந்த குறிப்பிட்ட இலக்கை நோக்கி செயல்படுத்த துவங்கும். நம் ஆழ்மனது திட்டவட்டமான செய்திகளை மட்டுமே நம்பும் தன்மை கொண்டது. அது நம் குறிக்கோளை நம்பி தன்னுள் இடம் அளித்து விட்டால், அந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளுமானால், நிச்சயம் குறிக்கோளே நம் வாழ்வு என்ற நிலையில் நாம் நிச்சயம் தடைகளை தாண்டி வெற்றிகளை குவிப்போம். சாதனைகளை நிகழ்த்துவோம்.

குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே

எப்போது உங்கள் மனது ஒரு உயரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவு செய்கின்றதோ, உடனடியாக அந்த குறிக்கோளை எழுத்து வடிவத்தில் குறிக்கோளை திரும்ப திரும்ப படியுங்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் தினமும் திரும்ப திரும்ப நடமாடும் இடங்களில் உங்கள் பார்வையில் படும்படி பதித்து வையுங்கள். இச்செயல் உங்களுக்கு உங்கள் குறிக் கோளை உங்கள் ஆழ்மனதில் பதிய வைக்க உதவும்.

ஆனால் சாதிக்க துடிக்கும் சாதனை மனிதர்கள் இந்த குறுக்கு வழிகள் எதுவும் இன்றியே அவர்கள் குறிக்கோளை நோக்கிய லட்சிய பயணத்தில் வைராக்கியத்தோடு, முழு மனதையும் ஈடுபடுத்தி செயலாற்றி வெற்றி கொண்டிருப்பர்.

தனியாத தாகம் கொள்ளுங்கள்

குறிக்கோளை அடைவதனால் வர விருக்கும். அற்புத நன்மைகளை நன்கு மனதில் பதிய வையுங்கள். இந்த நன்மைகள் உங்களுக்கு, உங்களை சார்ந்த குடும்பத்தவருக்கு, உங்கள், உங்கள் தன்மானத்திற்கு, சமூக அந்தஸ்திற்கு, உங்கள் பொருளாதார உயர்வுக்கு, உங்கள் வாழ்வின் அர்த்தத்திற்கு எந்த அளவுக்கு உதவி புரிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து முழுமையாக உணருங்கள். மேற்கண்ட எண்ணப் பதிவுகள் மற்றும் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மனக்காட்சித் திரையில் காணத் துவங்குங்கள். இந்த செயல் உங்கள் ஆழ்மனதிற்கு எப்படியேனும் இந்த குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தி விடும். அந்த தாகம் எந்த தடைகள் வந்தாலும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வெற்றிப்பாதையை நோக்கி வழிநடத்தும்.

முடியும் என்று நினைத்தால் முடியும்.

பலரும் குறிக்கோள்களை அடைய முடியாமல், குறிக்கோள்களையே விட்டுவிட காரணம், நான் சாதரணமானவன், நான் திறமை யற்றவன், என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களே. உலக வரலாற்றைபுரட்டி பார்த்தால் தெரியும். வெற்றி பெற்றவர்களில் அதிகமானவர்கள் ஏழ்மை, ஊனம், கல்வியறி வின்மை, என பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெற்றவரே என்பது புரிய வரும்.

ஆகவே நீங்கள் குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்ற மனநிலையை உருவாக்க வேண்டு மானால், வெற்றியாளர்களின் சுயசரிதைகளை படிப்பது பயிலரங்குகளில் கலந்து கொள்ளுவது, வெற்றி பெற்றவரின் சொற் பொழிவுகளை கேட்பது, என்னால் முடியும், என்னால் முடியும் என சுய அறிவுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.

வாழ்வின் அனைத்து பகுதிகளையும் கருத்தில் கொண்டு குறிக்கோள் முடிவு செய்வது நல்லது

குறிக்கோள் முடிவு செய்யும்போது, வாழ்வின் ஒவ்வொரு பகுதி (குடும்பம், பொருளாதாரம், சமூகம், உடல்நலம், மனநலம் போன்ற காரணிகளை)களையும் திருப்திப் படுத்தும் அடிப்படையில் அமையும் படி பார்த்துக் கொள்ளவும்.

ஏனென்றால், குறிக்கோளை நோக்கி வேகமான வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் ஒரு வாழ்வு சார்ந்த காரணியில் திருப்தியின்மை ஏற்பட்டுவிட்டால், நம் குறிக்கோளை நோக்கிய செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே குறிக்கோள் நிர்ணயம் செய்யும் வழிமுறையின் போது, உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் வாழ்வு சார்ந்த அனைத்து காரணி களிலும் எந்த எந்த நிலையை எட்ட வேண்டும் என்ற துணை குறிக்கோள்களையும் முடிவு செய்வது நல்லது.

எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட நாளில், நாம் அடைய முடிவு செய்திருக்கும் வாழ்நாளில் அடைய வேண்டிய குறிக்கோளினை நோக்கிய பயணத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தில், நம் உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் (எடை அளவு, இரத்த அளவு போன்ற காரணிகளில்)நாம் குடும்பத்திற்கு வழங்கும் தரமான நேரத்தின் அளவு (Quality time) எந்த அளவு இருக்க வேண்டும் என்பது போன்ற ஒவ்வொரு காரணிகளையும் குறிக்கோள் முடிவு செய்யும் வழிமுறையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

அவ்வாறு குறிக்கோளை அனைத்து குடும்ப, சமுதாய, தனிப்பட்ட காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்வோமானால் நம் லட்சிய பயணம் தங்கு தடையின்றி வேகமாக செல்வது உறுதி. வெற்றியும் உறுதி.

முடியும் என்றால் முடிவெடுங்கள்

குறிக்கோள் நோக்கிய பயணத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் மற்றொரு காரணி, உங்கள் குறிக்கோள் உங்களிடம் உள்ள பல திறன் மற்றும் நேரத்தின் மூலம் அடைய முடியும் குறிக்கோளா? இல்லையா என்பது.

நீங்கள் நிர்ணயம் செய்யும் குறிக்கோள் உங்கள் கல்வி தகுதி, உடல் பலம், பண பலம், தேர்ந் தெடுக்கும் கால அளவு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு கல்லூரியின் முதல்வராக வேண்டு மானால் 10 வருடம் விரிவுரையாளராக பணி யாற்றியே ஆக வேண்டும். அப்போது தான் உங்கள் குறிக்கோள் உங்கள் வாழ்வின் அடிப்படை அம்சமாக மாறும். நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக அர்ப்பண வாழ்வு வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் சாதனை சாகசங்கள் எளிதில் நிறைவறேத் துவங்கும்.

வாரன் பப்பட்- முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை

பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன.




வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது.



இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும்.



வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார்.



உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள்.



ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய ஒரு விசாலமான அறிவு தேவைப் படும்.



மேலும் பங்கு முதலீட்டை பொறுத்த வரை, இறந்த காலத்தை விட எதிர் காலத்திற்கே அதிக மதிப்பு என்பதால், இந்த நிறுவனத்தின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு துல்லியமாக கணிக்கும் திறமும் தேவைப் படும்.



இப்படி ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்தவுடன் இவர்கள் உடனடியாக முதலீடு செய்வதில்லை. சரியான விலைக்காக காத்திருக்கிறார்கள். சரியான விலையை கண்டறிய சில கணித முறைகளை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.



கணக்கு என்றவுடன் பயப் பட வேண்டாம்.



இன்று தாமும் பெருமளவுக்கு தோல்வியடைந்து நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களையும் அதிகம் தோல்வியுற செய்யும் பல நிபுணர்கள் எளிதில் விளங்காத கடினமான கணித முறைகளை பின்பற்ற வாரன் பபெட் போன்ற வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் மிக மிக எளிமையான கணக்கு முறையையே பின்பற்றி வருகின்றனர்.



இந்த புத்திசாலிகளை சந்தையின் குறுகிய கால மாற்றங்கள் பாதிப்பதில்லை. ஊடகங்கள் பரப்பும் வதந்திகள், பீதிகள், உள்ளிருப்பு தகவல்கள் (Insider Information) போன்றவற்றையும் இவர்கள் உதறித் தள்ளி விடுகிறார்கள்.



சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் ரியாக்சனை விட ஆக்சனை விரும்புகிறார்கள்.



இதயம் சொல்வதை கேட்காமல் மூளை சொல்வதை அதிகம் கேட்கிறார்கள்.



அதிகாரபூர்வமான அல்லது ஒரிஜினல் தகவல்களை மட்டுமே அதிகம் உபயோகிக்கிறார்கள்.



உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஆண்டறிக்கையை இது போன்ற புத்திசாலிகள் படிக்க, இந்த நிறுவனத்தை வாங்கலாமா வேண்டாமா என்று ஊடக நிபுணர்கள் தரும் பரிந்துரையை நம்மைப் போன்றவர்கள் படிக்கின்றோம்.



இந்த பங்கின் விலையை மட்டுமே நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, இவர்களோ, நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.



ஒரு நூறு புள்ளிகள் உயர்ந்து விட்டாலே கண்ணை மூடிக் கொண்டு உள்ளே குதிக்கும் நம் போன்றவர்க்கு மத்தியில் வருடக் கணக்காக கூட இவர்களால் பொறுமையாக இருக்க முடியும். அந்த பொறுமை இவர்களின் முடிவு எடுக்கும் திறன் மீது இவர்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.



இவர்களின் பாதை அறிவார்த்தமானது. அபாயங்கள் குறைந்தது.



இவர்களின் வெற்றி சதவீதம் மிகவும் அதிகம். சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் இவர்களை பெருமளவுக்கு பாதிப்பதில்லை.



இந்த பாதை இப்போதைக்கு சற்று சிரமமாக தோன்றினாலும், அவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.



அவர்களுடைய புத்திசாலித்தனம் தானாக வந்ததல்ல. அவர்களுடைய கடும் உழைப்பின் விளைவு. பொறுமை எனும் தவத்திற்கு கிடைத்த வரம்.



அந்த புத்திசாலிதனத்தை நாமும் அடைந்து இந்த பாதையில் நம்மாலும் பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க வல்ல விளக்கமான பதிவுகள் விரைவில்.

உன்னழகில்!

நீ



நனைய


மழை குளிக்கிறது


உன்னழகில்!


ஊரிலிருந்து


நீ வருவாயென


நேற்றே வந்து


வாசல் தெளித்துப் போயிருந்தது


மழை!


நனைந்து சுகித்திருந்த


உன்னை அம்மா


இழுத்துப் போக


சோவென அழத்தொடங்கியது


மழை!


மனம்


தோகை விரித்தாடுகிறது;


ம்,


அது நீ


வருவதற்கான அறிகுறி!


உன்னை ஒருமுறையாவது


தொட்டுப் பார்க்க முடியவில்லையே


என்ற சோகத்திலேயே


கருப்பாகிப் போனது


உன் நிழல்!


ஒவ்வொரு முறை


நான் கோவில் செல்லும்போதும்


உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை


சூடக் கேட்டு


நச்சரிக்கிறான் கடவுள்!


கோவில் விட்டு


நீ வெளிவரும்போது


பூக்கடை கிழவி கத்துகிறாள்


அய்யோ!சிலை ஒண்ணு


கோவில்விட்டு போகுதுன்னு!


உன்னைப் பற்றி


எழுத எழுதவே


அழகாகிறது என் தமிழ்!


தரையில் நீ பதித்திருந்த


தடத்தை கோலமென


சுற்றி புள்ளி வைக்கிறது


மழை!


நேரம் கிடைக்கையில்


கொஞ்சம் கற்றுக்கொடு


உன்னைப் போல்


சிணுங்க


உன் கொலுசுகளுக்கு!

இதய ஆரோக்கியம்

அண்மையில் சென்னை - வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் 'இதய ஆரோக்கியம்' குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. அதில், இதய நோய்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களையும், நமது வாழ்க்கை முறையினால் இதய பாதிப்பில் சிக்காமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் பிரபல மருத்துவர்கள் விரிவாகவே விளக்கமளித்தனர்.


அதன் முக்கிய அம்சங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

நம் இதயத்தை பற்றி முதலில் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதயத்தின் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கத்தான் மருந்துகள் இந்த உலகில் உள்ளதே தவிர, அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது தான் முதல் உண்மை. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்... ஒவ்வொரு மருந்தும் நமக்கு உதவிகள்தான் செய்கிறதே தவிர, போரிட்டு அந்த நோயை வெள்ள முடியாது!

பைபாஸ் சர்ஜரி, ஏன்ஜியோ பிலாஸ்ட் ஆகிய சிகிச்சைகள் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கு உதவி செய்கிறது. இதயத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை தட்டிவிட்டோ அல்லது அந்த பாகத்துக்கு பதில் வேறு குழாயை வைப்பது என அனைத்தும் நம் இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு மருத்துவர்களால் செய்யப்படும் ஒரு சிறு உதவிகள் மட்டும் தான். இதில் பேஸ்மேக்கரும் விதிவிலக்கல்ல.

ஆண்டுதோறும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயது முதல் 26 வயதுக்குள் இருப்பவர்களும் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இதயக் கோளாறா என்று நீங்கள் ஆச்சரியபடுவது புரிகிறது. ஆயினும், இது நமது சமூகத்தில் புதிதல்ல என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்டுதோறும் பல்லாயிரம் குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது அண்மைப் புள்ளிவிவரம்.

'30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் மாரடைப்பு வரும்' என்று இன்றும் பல பேர் நம்புகிறார்கள். அது முற்றிலும் தவறு. தற்பொழுது சராசரி 26 வயதுக்குள் இருப்பவர்களும் வந்துவிடுகிறார்களாம். இந்த வயது எண்ணிக்கை மேலும் குறையலாம் என்பது வருத்தத்துக்குரிய மருத்துவர்களின் புதிய கணிப்பு.

நமது ரத்தக் குழாயில் எல்.சி.டி என்னும் கொலஸ்ட்ரால் தான் நமக்கு இதய நோய் தொடர்பான குறைகளை எல்லாம் அழைத்துவரும் நண்பராக இருக்கிறது. இதைக் குறைக்கத்தான் முடியுமே தவிர, முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது.

இதய நோய் பிரச்னையில் மிகவும் பரிதாப நிலை கொண்டவர்கள் யார் என்றால், சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான். இவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் கூட இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. காரணம்..? சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு நரம்புகள் பலகீனமடைவதால், அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்பொழுது வலி அதிக அளவில் இருக்காது. எதேச்சையாக பலவீனம், தலைசுற்று என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவர்களிடம் செல்லும் பொழுது மருத்துவருக்கு சந்தேகம் வந்து, இ.சி.ஜி. எடுத்துப் பார்க்கும்பொழுதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது என்பது வேதனையான உண்மை. ஆகையால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்றுக் களைப்படைந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சாதாரண மனிதர்கள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே சர்க்கரை நோய் தாக்கியவர்களாக இருப்பின், கண்டிப்பாக 2 அல்லது 3 மாததுக்கு ஒரு முறை கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்துக்கான ஒரே மருத்துவரை தேர்ந்தெடுத்து, அவரிடமே சிகிச்சை செய்து கொள்வது மிக மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்... நமது உடலில் கெட்ட ரத்தம் (Bad Blood), நல்ல ரத்தம் (Good Blood) என இரண்டு வகையாக ரத்தத்தை மருத்துவ நிபுணர்கள் பிரித்துக் கூறுகிறார்கள். உதாரணமாக, நமது கையின் மேல் இருக்கும் கருப்பான நரம்புகள் அனைத்தும் கெட்ட ரத்தத்தைதான் கொண்டு செல்கின்றது. இதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், உங்களால் ஒன்றுமே அரிய முடியாது. இந்தக் கெட்ட ரத்தம் முழுக்க முழுக்க குறைந்த அழுத்தம் (Low Pressure) வகையை சேர்ந்ததால் தான் உங்களால் இதன் தன்மையை உணர முடியா நிலை ஏற்படுகிறது.

நல்ல ரத்தம் எங்கேதான் ஓடுகிறது என கேட்கிறீர்களா? நம் உடலில் எல்லா பாகங்களிலும் இந்த இரண்டு வகை ரத்தங்கள் சென்று வந்து தான் கொண்டிருக்கிறது. நம் கை உள்ளங்கை கீழே இருக்கும் நரம்பின் இடையில் ரத்த ஓட்டத்தை தொட்டுப் பார்த்தால் இதன் துடிப்பை நீங்கள் நன்றாக உணரலாம். இதற்கு காரணம் இந்த ரத்த நரம்புகள் உயர் அழுத்தத்தை (High Pressure) சேர்ந்ததுதான். உங்கள் காய்ச்சலுக்கு டாக்டர்கள் உங்கள் கையைப் பிடித்து பல்ஸ் பார்ப்பதை அறிந்திருப்பீர்கள். அவர் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் இருக்கும் வாட்சைப் பார்ப்பார். இத்தனை வினாடிக்கு இத்தனை துடிப்புகள் என கணக்கு வைத்து உங்களின் உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு என்பது முதற் கொண்டு நன்கு அறிந்து, அதற்கு தகுந்த மருந்துகளை கொடுப்பதும் இந்த நல்ல ரத்தம் ஓட்டத்தை வைத்துதான்.

ஒரு மனிதனுக்கு சராசரி உயர் ரத்த அழுத்தம் 120/80 இருக்க வேண்டும். வயதுக்கேற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 40 வயதிலும் இதே அளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த வயத்துக்குப் பிறகு ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

நீங்கள் நடக்கும்பொழுது அதிகமாக மூச்சு வாங்கினாலோ அல்லது உங்கள் கண்கள் தலையை சுற்றுவது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். (நடந்து கொண்டிருக்கும் போதே திடீர் இதய பாதிப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து ஏற்படும் மரணம் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்க.)

இயன்றை வரையில் நெய் வகை இனிப்புகளை சுவைப்பதைத் தவிருங்கள். ஐ.டி. முதலிய துறைகளைச் சேர்ந்தவர்கள் நொறுக்குத் தீனியாக இனிப்பை மிகுதியாக சாப்பிடுவதால், எல்.சி.டி. கொழுப்பு அதிகரித்து, வயது வித்தியாசமினிறி இதயம் பலகீனமாக்கும் மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.

"நானெல்லாம் காலையில் எழுந்ததும் வாக்கிங் பொயிடுவேன். அப்பறம் தான் உடற்பயிற்சி," என்று அதிகாரமாக சொல்பவராக நீங்கள் இருந்தால்... அது நோ யூஸ்! காலையில் எழுந்ததும் சிறிது வார்ம் அப் செய்ய வேண்டும். முதலில் தலையில் ஆரம்பித்து, அடுத்து தோள்கள், முக்கியமாக இடுப்பை முன்பும் பின்புமாக நன்றாக வளைத்து, இறுதியாக நமது பாதங்களுக்கு சிறு பயிற்சி கொடுத்த பிறகுதான் ஜாகிங் அல்லது வாக்கிங் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான் நீங்கள் நினைத்த மாதிரி உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடியும். இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

அதிகாலையில் எழுந்ததும் சுடச்சுட பால் ஆடையுடன் பாலோ அல்லது டி, காபி குடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை மறந்துவிடுங்கள். எருமைப் பாலை விட பசும்பால் குடிக்கலாம் அல்லது புரதச்சத்து குறைந்த பாலை தேர்ந்தெடுத்துப் பருகலாம். எதை குடித்தாலும் பாலாடையை எடுத்துவிட்டு, சற்று தண்ணீர் நிலையில் இருக்கும் பாலை குடிப்பதுதான் நல்லது. இதில் 18 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 3 மாதம் பிறகுதான் மற்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். உடலை வளைப்பது, குனிவது போன்ற பயிற்சிகளை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்.

ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவருக்கு சலிப்பிடித்து இருமல் ஏற்பட்டால், இதயத்தில் சிறு கணம் கொண்ட தலையனையை இதமாக அனைத்துக் கொண்டுதான் இரும வேண்டும். அதேநேரத்தில், அதிகப்படியாக 1 கிலோ அல்லது 1 லிட்டர் கணத்தைத்தான் தூக்க வேண்டும். கண்டிப்பாக பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் சர்ஜரி முடிந்து, 3 மாதங்களுக்கு மட்டும்தான். 6 மாதம் வரை சரியாக கடைபிடித்துவிட்டால் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

அசைவ பிரியர்களுக்கு மீன் மட்டும் தான் இதயத்துக்கு பலம் கூட்டும் சக்தியாக இருக்கிறது. அதற்காக, எண்ணெய்யில் பொறித்த மீன்களை அள்ளி சாப்பிடுவதும் தவறு. குழம்பு மீன்களை பிளேட் பிளேட்டாக உள்ளே தள்ளுவதும் தப்பு. வாரம் இரண்டு முறை ஒரு மனிதன் 100 கிராம் அளவில் தான் மீன் உண்ண வேண்டும்.

வீட்டில் ஒரே எண்ணெய்யை சமைப்பதும் முற்றிலும் தவறு என்று கூறும் மருத்துவர்கள் நல்லெண்ணை, கடலெண்ணை, மற்றும் தேங்கா எண்ணையை சரி அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணையை பாட்டிலுடன் சாய்த்து உபயோகப்படுத்துவதற்கு பதில் டீஸ்பூன்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்தது.

கொள்ளூ ரசம் மற்றும் அன்னாச்சிபழம் நம் இதயத்துக்கு உற்ற நண்பர்கள். இவற்றை வாரம் 2 தடவை சுழற்சி முறையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் வெந்தயம், ஆரேஞ்சு பழங்கள் மற்றும் எலுமிச்சை பழங்களும் எடுத்துக் கொள்ளலாம்.

"ஹலோ சார் நான் இதை எல்லாம் கரெக்டா செய்கிறேன், இதனுடன் டிரெட்மில்லில் தினமும் ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் சூப்பரா வேர்க்க வேர்க்க ஓட்டம் எடுப்பேன்," என்று மார்தட்டி சொல்கிறீர்களா?

சோ சாரி சார்... ஒரு மணி நேரத்துக்கு 6.5 கிலோமீட்டர் தான் உங்கள் நடை பயணம் இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் 35 வயதுக்குள் இருந்தால் தான் வெயிட்களை தூக்கி பழகலாம். 35 கடந்தவர்கள் வெறும் நடைபயிற்சி மற்றும் ஓட்டத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது.

அதிகபடியான மகிழ்ச்சி மற்றும் துக்கங்களில் நம்மை நாமே ஆழ்த்திக் கொள்வது மிக மிக தவறு. எப்போதும் சாதாரண மனநிலையிலேயே இருக்க வேண்டும். எதிலும் 'டேக் இட் ஈஸி' பாலிஸிதான் பெஸ்ட்!

"ஹய்யோ எனக்கு பைபாஸ் சர்ஜரியா?!" என்று எல்லோரையும் திகிலில் ஆழ்த்தாதீர்கள். தற்பொழுது பச்சிளம் குழந்தைக்குக் கூட இதை சர்வசாதாரணமாக நடைபெற்று வெற்றி வாகை சூடிய மருத்துவர்கள் முக்கிய நகரங்களில் இருக்கிறார்கள்.

35 வயதுக்குள் இருக்கும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அவரது தொடையோ அல்லது கால் முட்டியின் கீழோ இருக்கும் நரம்புகள் எடுத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சரி செய்திருப்பார்கள். அதனால் காலின் முட்டி முதல் உள்ளங்கால் வரை கட்டுகள் போட்டிருப்பார்கள். அதை அலட்சியமாக விட்டு விடுவதும் நல்லது அல்ல. 3 முதல் 6 மாதம் வரை காலுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

நம் முன்னோர்கள் சரியான நடைபயிற்சி, துணி துவைப்பது, வீட்டை மொழுகுவது, மாவாட்டுவது, நேரம் தவறாமல் உண்டது, அந்த உணவுகளை சரியாக மென்று உண்பது ஆகியவற்றால் தான் திடமாக இருந்தார்கள். அதனால், எந்த பிரச்னையை அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது. அது மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி, சங்கடத்தை கொண்டதாக இருந்தாலும் சரி அவர்களை அதிகமாக பாதித்தது இல்லை.

ஆனால் இன்றோ... இதை நாம் எதை முழுமையாக செய்கிறோம்? அதிவேக உலகமாகிவிட்டது. எதிலும் வேகம், அவசரம். நில்லுங்கள் சற்று சிந்தியுங்கள்.

கண்டிப்பாக குடி மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முதலில் முழுவதுமாக கைவிட வேண்டும். இது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இவ்விரண்டும் தான் இதய பாதிப்புக்கு முக்கியக் காரணிகளில் முன்னிலை வகிப்பவை.

அதேபோல், மூன்று விஷயத்தை தவிர்த்துவிடுவது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. அவை... கறி (Meat), ஹர்ரி Hurry & ஸ்கேரி (Scary).

இதய ஆரோக்கியம்

கடிதம் கை நீட்டி அரவணைக்கும் எனும் கூற்றை ‘விழி’ப்படுத்தினால் இப்படித் தான் இருக்கும் !

மனித வாழ்கை - மயானத்தில் கண்ட பொன் வரிகள்

அட ! அப்படியா !!!!!!!!!?

உலகப் புகழ் ஓவியர் பிக்காசோ, தன்னுடைய இளமையில் வறுமையில் வாடினார். அப்போது குளிரிலிருந்து தப்பிக்க தன்னுடைய ஓவியங்களையே எரித்து குளிர் காய்வாராம்.


டைட்டானிக் திரைப்படத்தைத் தயாரிக்க ஆன செலவு, டைட்டானிக் கப்பலை உருவாக்க செலவான பணத்தை விட அதிகம்

ஆப்பிரிக்காவில் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் களிமண்ணை உண்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கிறார்கள்.

மனிதர்கள் பேசும் இரண்டு விதமான பாஷைகளை பிரித்தறிய எலிகளால் முடியும். எலிகள் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்தாலும் ஒரு சிறு காயம் கூட படாமல் தப்பிவிடும்.

மிச்சிகனில் கணவனின் அனுமதியில்லாமல் ஒரு பெண் தன்னுடைய தலை முடியை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

சகாரா பாலைவனத்தில் 1979, பிப்ரவரி 18ம் தியதி பனி பொழிந்தது.

(மர்ஷல்லை தவிர ) 91 சதவீதம் மக்கள் அடிக்கடி பொய்பேசும் பழக்கமுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

அண்டார்டிக்கா ஒரு பாலைவனம்.

அமெரிக்காவில் உள்ள மில்லியனர்களில் பெண்களே ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள்.

வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

அலாரம் கடிகாரம் தயாராக்கிய போது, அது அதிகாலை நான்கு மணிக்கு மட்டுமே சத்தமெழுப்பும் வகையில் தயாராக்கப்பட்டிருந்தது.

அண்டார்டிக்காவில் பதிவான அதிகபட்ச வெப்பம் மூன்று டிகிரி ஃபாரன்கீட்.

1666ல் லண்டனில் மாபெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. லண்டன் மாநகரத்தின் பாதியை அழிந்த அந்த தீவிபத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே காயமடைந்தனர்.

நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பை காஃபியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. அதிலுள்ள இருபத்தாறு வகை இரசாயனங்கள் மட்டுமே சோதிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் பதிமூன்று இரசாயனங்கள் எலிகளுக்கு புற்று நோய் ஏற்படுத்தியிருக்கின்றன.

ஒரு சராசரி மனிதன் நடக்கும் தூரம் பூமியை மூன்று முறை சுற்றி வரும் தூரம் !

நமது பூமி தினமும் நூறு டன் அளவுக்கு எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காரணம் புமியில் விழும் விண்வெளிப் புழுதி.

நீங்கள் பிறந்தநாள் கொண்டாடும் நாளில், உங்களைத் தவிர குறைந்தபட்சம் தொன்னூறு இலட்சம் பேர் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.

உங்கள் வாயிலுள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையை விட அதிகம்.

கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

1916ம் ஆண்டு அமெரிக்காவில் ஒருவர் 40,000 டன் எடையுள்ள வீட்டை அஞ்சல் செய்தான் ! அதற்குப் பின் முழு வீட்டையும் அஞ்சலில் அனுப்பக் கூடாது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டிலுள்ள மோனுமெண்டல் ஆக்சிஸ் உலகிலேயே அகலமான சாலை. இங்கு நூற்று அறுபது கார்கள் பக்கம் பக்கமாகப் பயணிக்க முடியும்.

தன்னுடைய பதினெட்டாவது வயதில் இங்கிலாந்து அரசி ராணுவத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றினார்.

ஒலிவ மரம் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் உயிர் வாழும் !

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாகத் துடிக்கும்.

சிலந்தியின் நூல் இரும்பை விட வலிமையானது.

பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட வேகமாக பேசவும், வாக்கியங்களை அமைக்கவும், கற்றுக் கொள்ளவும் ஆரம்பிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்ற எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளோடும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவர்.

கொசுக்களை வசீகரிக்கும் நிறம் நீலம் ! மற்ற நிறங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக நீல நிறம் கொசுக்களை வசீகரிக்கிறது.

ஒரு சாதாரண சாக்லேட்டில் சராசரியாக எட்டு பூச்சிக் கால்கள் இருக்கின்றனவாம் !

தேளின் மீது கொஞ்சமாக சாராயம் ஊற்றினால் அது இறந்து விடும்.

பெரும்பாலான கடிகார விளம்பரங்களில் நேரம் 10:10 என்றே காண்பிக்கின்றன. காரணம் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட நேரம் அது.

காலையில் காஃபி குடிப்பதை விட அதிக சுறுசுறுப்பு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும்.

வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் கால்களால் சுவையறியும் தன்மை படைத்தவை.